இந்நாட்டின் பயங்கரவாதத்திற்கு முஸ்லிம் இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றொரு இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மீதும்அதன் தலைமைத்துவத்தின் மீதும் வீண் பழியை சுமத்துவது என்பது எதிர்த் தரப்பினருடைய வங்குரோத்து அரசியலையும் மிகப் பெரிய ஜனநாயக விரோத செயற்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
அண்மையில் கண்டி ரோயல் ஹோட்டலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந் கொண்ட அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு இதனைத் தொிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தொிவிக்கையில்
என்னையும் பயங்கரவாதி சஹ்ரானையும் தொடர்புப்படுத்தி பழைய ஒரு காணொளியைக் காட்சிப்படுத்தி அவருக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டை காட்ட எத்தனித்தனிக்கும் இழிவான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதன் பின்னணியென்னவென்றால், 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொண்டோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு வாய்ப்பு கிட்டின. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
இதில் காத்தான்குடியைச் சேர்ந்த தற்போதை ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் தோல்வி அடைந்தார். அன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்து தோல்வி அடைந்த அவர் நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சரணடைந்து அவரிடத்தில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக் கொண்ட தினத்தில் தம்முடைய ஆத்திரத்தை குண்டர்களை ஏவி அடாவடித் தனத்தை கட்டவிழ்த்து எம்முடைய கட்சிக்காரர்களைத் துன்புறுத்தி அடாவ டித் தனத்தை கட்டவிழ்த்து மிக மோச மான நடவடிக்கைகள் அங்கு அரங்கேற்றி னார்.
அது மாத்திரமல்லா மல், பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கப்பட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் உடனடியாக கட்சியின் தலைவன் என்ற வகையில் காத்தான்குடி சென்றேன். பாதிக்கப்பட்ட கட்சிக் காரர்ர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் அங்கு சென்றேன். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கப் போன இடத்திலே அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் குறித்த பயங்கரவாதியும்கலந்துக் கொண்டிருந்திருக்கலாம். அது எனக்கு தெரியாத விடயம். எனக்கு அந்த பயங்கரவாதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது
இந்த நிலையில் வேண்டும் என்று இவ்வாறான பயங்கரவாதி ஒருவரையும் பிற்பட்ட நாட்களில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவரையும் அகஸ்மாத்தாக இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலே இடையில் புகுந்து ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்ட பிற்பாடு என்னையும் சம்மந்தப்படுத்தி பயங்கரவாதத்திற்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்ற விவகாரம் மிகவும் அபத்தமானது.
எனவே தங்களுடைய சொந்த சுய இலாப அரசியலுக்காக எதிர்த்தரப்பு ஊடகங் களைப் பாவித்து எம்மை வலுவிழக்க செய்ய விளைவது என்பது மிகபெரிய ஜனநாயக விரோத செயற்பாடு. இதை வன்மையாகக் கண்டிப்பது மாத்தி ரமல்ல இந்த செயற்பாட்டிலே நாங்கள் ஒரு போதும் இவ்வாறான பயங்கர வாதி களை ஊக்குவிப்பவர்களாக நாங்கள் இருந்த தில்லை. இனியும் இருக்கப் போவ தில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM