(இராஜதுரை ஹஷான்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கு ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் அடிபணியும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க மாட்டார்கள். நாட்டை பிளவுபடுத்தும் நிபந்தனைகளை எவ்வித மறுப்பும் இன்றி நிராகரித்துள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழும் முஸ்லிம்–தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குகின்றார்கள். அடிப்படைவாதிகளினதும், பயங்கரவாதி சஹ்ரானின் சகாக்களின் ஆதரவு பாரதூரமானது எனவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறை - திக்வெல்ல நகர பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கூட்டமைப்பினர் உட்பட தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்த 13 கோரிக்கைகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ எவ்வித இழுத்தடிப்புக்களும் இன்றி நிராகரித்துள்ளார். நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்குவோம்.
நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கைகளுக்கு நிச்சயம் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும். அதிகாரத்தை கைப்பற்றுவதைத்தவிர பிறிதொரு நோக்கம் அவர்களுக்கு கிடையாது. அனைத்து மக்களுடன் இணைந்து இலங்கையராக வாழும் தமிழ்–முஸ்லிம் மக்கள் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுனவும் கொள்கையினை முன்னிலைப்படுத்தியே ஒன்றிணைந்துள்ளோம். கடந்த நான்கரை வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற அரசியல் நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்தும் நவம்பர் 16ஆம் திகதியுடன் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
எல்பிடிய பிரதேச சபை தேர்தல் பெறுபேறுடன் ஜனாதிபதி தேர்தலை ஒப்பிட முடியாது என்று குறிப்பிடும் ஐக்கிய தேசிய கட்சியினர் அந்த பிரதேச சபை தேர்தலை வெற்றிகொள்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் மறைமுகமாக அரச அதிகாரங்கள் மூலம் தேர்தல் சட்டத்திற்கு முரணான முறையில் முன்னெடுத்தது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே அதிகளவிலான தோல்விகளை எதிர்கொண்டுள்ளார். அதாவது இடம்பெற்ற 24 தேர்தல்களில் 21 தேர்தல்களில் 29 சதவீத அடிப்படையில் தோல்வியடைந்துள்ளார். இம்மாதம் இடம்பெற்று முடிந்த எல்பிடிய பிரதேச சபை தேர்தலை வெற்றிகொள்ளும் பொறுப்புக்கள் அனைத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தலை வெற்றிகொள்ள அவர் அனைத்து அரச அதிகாரங்களை பிரயோகித்தும் மக்களாணையினைப் பெற முடியவில்லை. பிரதமர் ரணில் பெற்ற வாக்குகளை விட குறைவாகவே அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிநடத்தலின் ஊடாக பெற்றுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கருத்துக்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவரது கருத்துக்களை போன்றதாகவே காணப்படுகின்றது. அமைச்சரவை உறுப்பினர்கள் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றஞ்சாட்டினார். இக்குற்றச்சாட்டு உண்மை என்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை. மாறாக சர்வதேச மட்டத்தில் யுத்தத்தை வெற் றிகொண்ட இராணுவத்தினர் குற்றவாளிகளாக காணப்பட்டார்கள். இதற்கு 2015ம் ஆண்டு வெளிவிவ கார அமைச்சர் பதவி வகித்த மங்கள சமரவீர என்றும் பொறுப்புக் கூறவேண்டும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM