(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேரக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவளர்களினால் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்த விடயம் குறித்து அந்த கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே இதற்கான தீர்வு வழங்கப்படும் வரை என்னால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது.
சுதந்திரக் கட்சியின் தனித்துவத் தன்மையை பாதுகாக்கும் வகையில் பொதுஜன பெரமுனவுடமனும் கோத்தாபயவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் மூலமாகவே நாம் அவருக்கு ஆதரவளித்துள்ளோம்.
ஆகவே இவ்வாறான அதிருப்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தவிர்த்துக் கொள்ள வேண்டியவையாகும் என்பதாலேயே இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM