இரு வேறு வாகன விபத்துகளில் பெண்ணொருவர் உட்பட மூவர் பலி

Published By: Vishnu

20 Oct, 2019 | 03:25 PM
image

(செ.தேன்மொழி)

குளியாபிட்டி மற்றும் வீரம்புகெதர பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குளியாபிட்டி - கிரிந்தெவ வீதியில் கொன்கஹகெதர பகுதியில் சாரதியின் கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாதையிலிருந்து விலகிச் சென்று கம்பம் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

எலப்பதெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அஞ்சன மதுக்க பதிரண என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை வீரம்புகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகல் - நீர்கொழும்பு வீதியில் புளூபிட்டியிலிருந்து நாரம்மல நோக்கி சென்ற கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த காரின் சாரதியும் அவரது மனைவியும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மடவல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கயான் ஹர்ஷண பாலசூரிய மற்றும் 30 வயதுடைய சஜீதா மனோஹாரீ கம்லத் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02