பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பின் சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்!

Published By: Jayanthy

20 Oct, 2019 | 04:14 PM
image

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action task force- FATF) சாம்பல் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில்  நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் இலங்கையை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்க FATF முடிவு செய்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்காமல் இலங்கை அரசு அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டி அதனை சாம்பல் பட்டியலில் சேர்த்து கண்காணிப்புக்கு உட்படுத்த  நிதி நடவடிக்கை பணிக் குழு முடிவெடுத்து செயற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடந்த கூட்டத்தில் பயங்கரவாதத்திற்க எதிரான  இலங்கை அரசின் நடவடிக்கை  போதுமானதாக இல்லை என்பதால் இலங்கை சாம்பல் பட்டியலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நிதி நடவடிக்கை பணிக் குழுவின்  கூட்டம்  கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளில் இலங்கையை சாம்பல் பட்டியலிலிருந்து நீக்க பணிக் குழு முடிவு செய்தது.

மேலும் இலங்கை, எத்தியோப்பியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகள் சர்வதேச நிதி நடவடிக்கை குழு  சுட்டிக்காட்டிய நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டுள்ளதாக FATF பாராட்டியுள்ளது. 

இதே வேளை  பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியதால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

நிதி நடவடிக்கை பணிக் குழுவானது சர்வதேச நிதி அமைப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட குற்றங்களை கண்காணிக்கும் நோக்கில்  1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40