எமது அரசில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் : கோத்தாபய

Published By: R. Kalaichelvan

18 Oct, 2019 | 03:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில்  பாரிய  பின்னடைவினை  எதிர்க் கொண்டுள்ள  மலையக மக்களுக்கு  எமது அரசாங்கத்தில் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும்.

தேசிய வருமானத்தை எவ்வாறு ஈட்டிக் கொள்ள முடியும் என்ற  மார்க்கத்தை  நன்கு அறிவோம். ஆளும் தரப்பினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு செயற்பாட்டின் ஊடாக பதில் வழங்குவேன். என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை  மன்ற  கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய  பங்களிப்பினை வழங்கும்   தேயிலை  உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலைமை  பாரிய   நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

ஒரு நாள்  சம்பளம் 1000ம் ரூபாவாக வேண்டும் என்பது மலையக மக்களின் நியாயமான கோரிக்கையாகும். சம்பள விவகாரத்தில் அரசாங்கம் முழுமையாக தோட்ட கம்பனிகளையே  நம்பியிருந்தது.  தோட்ட  கம்பனிகள் எப்படியும்  மலையக மக்கள் கோரும்     சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள்.

மலையக மக்களின்  சம்பள விவகாரத்தில்  கம்பனிகளை மாத்திரம் நம்பியிருந்தால் எவ்வித பயனும் ஏற்படாது. நிச்சயம் நாங்கள்   1000  நாள்  கொடுப்பனவும்  வழங்கி மலையகத்தினை நகரத்திற்கு  இணையான வசதிகளுடன் அபிவிருத்தி செய்வோம். கல்வி ,   மற்றும்தொழிற் துறையினை விருத்தி செய்ய வேண்டிய  தேவை   காணப்படுகின்றது.

பொருளாதார ரீதியில்   நாங்கள் முன்வைக்கும் திட்டங்கள் , மற்றும்   வரி நீக்கம் தொடர்பில் ஆளும் தரப்பு  தற்போது பல்வேறு    கேள்விகளை முன்வைத்துள்ளது.வாதப்பிரதி வாதங்களில் ஈடுப்பட வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஆட்சிக்கு  வந்து  வழங்கியுள்ள  வாக்குறுதிகளை செயற்படுத்தி பதில் வழங்குவேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31