ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பத்து நாட்களுக்குள் 851 முறைப்பாடுகள் 

Published By: Vishnu

18 Oct, 2019 | 12:11 PM
image

(செ.தேன்மொழி)

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்போது நடளாவிய ரீதியில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளின் போது இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் குறித்து  அவதானம் செலுத்தி வரும் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரையில் 851 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24  மணித்தியாலத்திற்குள் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 89 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 81 முறைபாடுகள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாகவும் , 6 முறைப்பாடுகள் தேர்தல் காலங்களில் இடம்பெறும் வெவ்வேறு முரண்பாடுகளின் காரணமாகவும் வன்முறைகள் தொடர்பில் இரு முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 4 மணிவரையான பத்து நாட்களுக்குள் 851 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையம் , இதன்போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 814 முறைப்பாடுகளும், வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 29 முறைப்பாடுககளும், மற்றும் எட்டு முறைபாடுகள் தேர்தல் வன்முறைகள் தொடர்பிலும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21