5 கட்சிகளின் பொது இணக்கம் குறித்து பேச விரும்புகிறோம் ; ரணிலிடம் சுரேஷ் தெரிவிப்பு

Published By: Daya

18 Oct, 2019 | 10:08 AM
image

(எம்.நியூட்டன்)

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலை­வ­ரான உங்­க­ளையும் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தாச மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளான மங்­கள சம­ர­வீர ராஜித சேனா­ரத்ன ஆகி­யோரை ஒன்­றாக சந்­தித்து பேச­வி­ரும்­பு­கின்றோம். இதற்­கான ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கோரி­யுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேற்­றுக்­காலை சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போதே இந்தக் கோரிக்­கையை விடுத்­துள்ளார்.

இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விடயம் தொடர்பில் ஏற்­கெ­னவே சுமந்­திரன் எம்.பி. பேசி­யுள்­ள­தா­கவும் கொழும்பு திரும்­பி­யதும் சந்­திப்­புக்­கான ஏற்­பாட்­டினை செய்­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இந்த சந்­திப்பில் பல்­வேறு விட­யங்­களை தான் சுட்­டிக்­காட்­டி­ய­தாக சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

எங்­க­ளு­டைய மக்கள் வெறுப்பு ,விரக்தி, அதி­ருப்தி போன்ற எல்­லா­வற்­று­டனும் தான் இருக்­கின்­றார்கள். இத்­த­கைய நிலையில் அவர்கள் வாக்­க­ளிக்­கின்ற மன­நி­லையில் இல்லை. கோத்­த­பாய ராஜ­பக்­சவை தமிழ் மக்­க­ளுக்குப் பிடிக்­காது. ஆகவே சஜித்­துக்கு வாக்­க­ளிப்­பார்கள் என்று நினைப்­பதில் அர்த்­த­மில்லை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஈ.பி.ஆர்.எல்.எப். தலை­வரும்  முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன­சு­ரேஷ்­பி­றே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

சந்­திப்பில் எடுத்­துக்­கூ­றிய விட­யங்கள் தொடர்பில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­த­தா­வது

தமிழ் மக்கள் எத்­த­கைய மனோ­நி­லையில் இருக்­கின்­றார்கள் என்­பது உங்­க­ளுக்குத் .தெரிந்­தி­ருக்கும். ஏனெனில் எங்­க­ளு­டைய மக்கள் வெறுப்பு, அதி­ருப்தி, விரக்தி எல்­லா­வற்­று­டனும் தான் இருக்­கின்­றார்கள். மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாய்­மார்கள் தங்கள் பிள்­ளை­களைத் தேடி போராட்டம் செய்­கின்­றார்கள். நீங்கள் யாரும் இதனைக் கண்­டு­கொள்­ள­வில்லை.

அதே­போன்று காணி­வி­டு­விப்பு தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.இத்­த­கைய பிரச்­சி­னைகள் தொடர்ந்­து­கொண்­டி­ருக்கும் போதும் புதிது புதி­தாக பிரச்­சி­னை­களை உரு­வாக்கிக் கொண்டு வரு­கின்­றீர்கள். கன்­னி­யாவில் முல்­லைத்­தீவில் எத்­த­கைய பிரச்­சி­னைகள் இடம்­பெ­று­கின்­றது என்­பது உங்­குள்குத் தெரியும். இவ்­வா­றான சூழ்­நி­லையில் எவ்­வாறு மக்­க­ளிடம் வாக்­க­ளிக்­கு­மாறு கோர­மு­டியும்.வாக்­க­ளிக்­கின்ற மனோ­பா­வதில் நாங்­க­ளும்­இல்லை தமிழ் மக்­க­ளும்­இல்லை. உங்­க­ளிடம் பலரும் பல கருத்­துக்­களைக் கூறு­வார்கள் உங்கள் மனதை குளிர வைப்­ப­தற்­கா­கவும் கருத்­துக்கள் கூறு­வார்கள். உண்மை அவ்­வா­றில்லை. சில­ரிடம் கோத்­த­பாய ராஜ­பக்­சவை தமிழ் மக்­க­ளுக்குப் பிடிக்­காது. ஆகவே சஜித்­துக்கு வாக்­க­ளிப்­பார்கள் என்று  நீங்கள் நம்­ப­மு­டி­யாது.சஜித் பிரே­ம­தாச இங்கு வந்து ஏதும் செய்­ய­வில்லை. அது மட்­டு­மன்றி உங்கள் கட்­சியும் அர­சாங்­கமும் ஒன்றும் செய்­ய­வில்லை. இது ஒரு புற­மி­ருக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தைத் திறப்­ப­தற்­காக இங்கு வந்­துள்­ளீர்கள்.

 இங்கு வேலை­வாய்ப்­பிற்­காக 93 தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்­களை இணைத்­துள்­ளீர்கள். இது மட்­டு­மன்றி மின்­சார சபையின் மின்­மானி பரி­சோ­த­னைக்­காக தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். வன­வி­லாகா உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் உள்­ளார்கள். இவ்­வாறு செய்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் எவ்­வாறு தமிழ் மக்கள் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பார்கள்.

  குறித்த விட­யத்தில் ஏதா­வது மாற்­றங்கள் செய்­ய­மு­டி­யுமா? மேலும் அர­சியல் தீர்வு என்­பது வேறொரு பிரச்­சினை. யுத்­த­திற்கு பின்­ன­ரான சூழலில் அதிலும் இந்த அரசின் காலத்தில் இன்னும் பல புதிய பிரச்­சி­னை­க­ளையே உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள் என்ற விட­யத்தை எடுத்­து­ரைத்­துள்ளேன்.மேலும் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முயற்­சி­யினால் ஒன்­றி­ணைந்த கட்­சியின் தலை­வர்கள் உங்­களைச் சந்­திக்­கின்­ற­போது மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடமுடியும்.

இந்தச் சந்திப்பிற்கு கட்சியின் தலைவர் என்றரீதியில் நீங்களும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் மங்கள சமரவீர ராஜித சேனாரட்ண போன்றேரை ஒன்றாக சந்திப்பதற்கு விரும்புகின்றோம் எனக்கூறியிருந்தேன் இதற்குப் பிரதமர் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கூறியிருந்தார் நான் கொழும்பு சென்றதும் இதற்காக ஒரு நேரம் ஒதுக்கித் தருவதாகக் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00