(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை இலங்கை மன்றக்கல்லூரியில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் கைச்சாத்திடலுடன் அமுல்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டதை தொடர்ந்து இன்று இரு தரப்பினருக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப் பெரும, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன. உதய கம்மன்பில, பவித்ரா வன்னியராச்சி, தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஆகியோரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் உட்பட அதன் முக்கிய தரப்பினரும் மலையக மக்களும் கலந்து கொண்டார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையிலான இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலை 09.11 மணியளவில் கைச்சாத்திடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM