(இரா.செல்வராஜா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்கும் இடையிலான ஜனாதிபதி தேர்தலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை காலை 8.30 மணியளவில் இலங்கை மன்றக் கல்லூரியில் கைச்சாத்திடப்பட இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் , இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும் கைச்சாத்திட உள்ளனர் எனவும் நிதிச் செயலாளர் ராமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
நாளைய இந்நிகழ்வில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் செயலாளர் அனுசியா சிவராஜா , உப தலைவர் ,சட்டதரணி கா.மாரிமுத்து உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்வார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM