திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய மாணவி முதற்தடவையாக பழுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
நேற்று புதன்கிழமை காலை பொலனறுவையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பழுதூக்கும் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய மாணவி செல்வி என்.மிதுஷா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த 20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்று தனது பாடசாலைக்கும், கிழக்கு மாகாணத்திற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமையைச் சேர்த்துக் கொடுத்துள்ளார்.
இவரது பயிற்றுவிப்பாளர் கே.உமாசுதனின் சிறந்த பயிற்றுவிப்பில் தொடர்ச்சியாக பழு தூக்கும் போட்டியில் திருகோணமலை மாவட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் அண்மையில் சாதனைகளை ஏற்படுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM