அரச பொது நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு உதவும் வகையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும், வீரகேசரி நிறுவனமும் இணைந்து இலவச வதிவிட பயிற்சிப் பட்டறையை நடத்தவுள்ளன.
நாளை வெள்ளி 18 ஆம், 19 ஆம், 20 ஆம் திகதிகளில் அட்டன் “சீடா” கல்வி அபிவிருத்தி வள நிலையத்தில் இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறைக்கு முழுமையான அனுசரணையை அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் “இந்திய வம்சாவளித் தமிழர் பேரவை” (ASSOCIATION OF INDIAN ORIGIN TAMILS OF SRI LANKA - AUSTRALIYA ) வழங்கியுள்ளதாக மன்றத்தின் உபதலைவர் ஏ.எஸ்.ஞானம் தெரிவித்துள்ளார்.
மேற்படி பரீட்சைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து பெரும்பாலானோர் தோற்றவுள்ளதால் அவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனை வழங்கி உதவும் வகையில் கடந்த மாதம் முதலாம் கட்டமாக வதிவிட வசதியுடன் கூடிய இலவச பயிற்சிப் பட்டறை அட்டன் “சீடா” கல்வி அபிவிருத்தி வள நிலையத்தில் நடத்தப்பட்டிருந்தது.
இதில் பங்குபற்ற 75 பேர் விண்ணப்பித்திருந்தும் 65 பேர் மாத்திரமே பங்குபற்றியிருந்தார்கள். மூன்று நாட்கள் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறைக்கு உணவு, தங்குமிட வசதி மற்றும் வளவாளர்களுக்கான ஏற்பாடுகள் முதலானவற்றுக்காக சுமார் 3 இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருந்தது.
நான்கு கட்டங்களாக தலா மூன்று நாட்களுக்கு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தொடர் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் கட்டத்தில் பங்குபற்ற 65 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மூன்று பாடங்களில் நடத்தப்படும் பயிற்சிப் பட்டறையில் வளவாளர்களாக எஸ். தவசேகர் (பொது உளச்சார்பு) எஸ். குகன் (பொது அறிவு) சி. தங்கரூபன் (ஆக்கபூர்வமான பங்குபற்றலும் தொடர்பாடல் திறன்களும்) ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஷ் ஆகியோரின் வழிகாட்டலில் என். கஜேந்திரகுமார் ஒருங்கிணைப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
நிகழ்வின் இறுதி நாளன்று மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் போஷகர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM