மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும் வீர­கே­ச­ரியும் இணைந்து நடத்தும் பட்­டறை!

17 Oct, 2019 | 01:08 PM
image

அரச பொது நிர்­வாக சேவை ஆட்­சேர்ப்பு போட்டிப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்கு உதவும் வகையில் மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும், வீர­கே­சரி நிறு­வ­னமும் இணைந்து இல­வச வதி­விட பயிற்சிப் பட்­ட­றையை நடத்­த­வுள்­ளன.

நாளை வெள்ளி 18 ஆம், 19 ஆம், 20 ஆம் திக­தி­களில் அட்டன் “சீடா” கல்வி அபி­வி­ருத்தி வள நிலை­யத்தில் இரண்டாம் கட்­ட­மாக நடத்­தப்­படும் இந்த பயிற்சிப் பட்­ட­றைக்கு முழு­மை­யான அனு­ச­ர­ணையை அவுஸ்­தி­ரே­லி­யாவை தள­மாகக் கொண்டு இயங்கி வரும் “இந்­திய வம்­சா­வளித் தமிழர் பேரவை” (ASSOCIATION  OF  INDIAN  ORIGIN  TAMILS  OF  SRI  LANKA  -  AUSTRALIYA ) வழங்­கி­யுள்­ள­தாக மன்­றத்தின் உப­த­லைவர் ஏ.எஸ்.ஞானம் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி பரீட்­சைக்கு நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லி­ருந்து பெரும்­பா­லானோர் தோற்­ற­வுள்­ளதால் அவர்­க­ளுக்கு வழி­காட்டி ஆலோ­சனை வழங்கி உதவும் வகையில் கடந்த மாதம் முதலாம் கட்­ட­மாக வதி­விட வச­தி­யுடன் கூடிய இல­வச பயிற்சிப் பட்­டறை அட்டன் “சீடா” கல்வி அபி­வி­ருத்தி வள நிலை­யத்தில் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதில் பங்­கு­பற்ற 75 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்தும் 65 பேர் மாத்­தி­ரமே பங்­கு­பற்­றி­யி­ருந்­தார்கள். மூன்று நாட்கள் இடம்­பெற்ற பயிற்சிப் பட்­ட­றைக்கு உணவு, தங்­கு­மிட வசதி மற்றும் வள­வா­ளர்­க­ளுக்­கான ஏற்­பா­டுகள் முத­லா­ன­வற்­றுக்­காக சுமார் 3 இலட்சம் ரூபா செல­வி­டப்­பட்­டி­ருந்­தது.

   நான்கு கட்­டங்­க­ளாக தலா மூன்று நாட்­க­ளுக்கு நடத்­து­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள தொடர் பயிற்சிப் பட்­ட­றையின் இரண்டாம் கட்­டத்தில் பங்­கு­பற்ற 65 பேருக்கும் அழைப்பு அனுப்­பப்­பட்­டுள்­ளது. மூன்று பாடங்­களில் நடத்­தப்­படும் பயிற்சிப் பட்­ட­றையில் வள­வா­ளர்­க­ளாக எஸ். தவ­சேகர் (பொது உளச்­சார்பு) எஸ். குகன் (பொது அறிவு) சி. தங்­க­ரூபன் (ஆக்­க­பூர்­வ­மான பங்­கு­பற்­றலும் தொடர்­பாடல் திறன்­களும்) ஆகியோர் கலந்துகொள்­வார்கள்.

இலங்கை திறந்த பல்­கலைக்கழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ. எஸ். சந்­தி­ரபோஸ், பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி இரா. ரமேஷ் ஆகி­யோரின் வழிகாட்டலில் என். கஜேந்திரகுமார் ஒருங்கிணைப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

நிகழ்வின் இறுதி நாளன்று மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் போஷகர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56