(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 35 அரசியல் கட்சிகளுடன் கூட்டணியமைத்துக் கொள்ளும். பொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பாராளுமன்ற அங்கீகாரத்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளடங்கலாக இதுவரையில் 23 கட்சிகள் கூட்டணியமைத்துக் கொண்டுள்ளன. தற்போதும் 12 அரசியல் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 35 கட்சிகளுடன் பலமான கூட்டணியை அமைத்துக் கொள்வோம்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமை பாரிய பலமாகக் காணப்படுகின்றது. கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும், அடிப்படை பொதுக் கொள்கைகளுக்கும் இணக்கமாகக் காணப்பட்டமையினாலே வெற்றிகரமான கூட்டணி தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும், அடிப்படைக் கொள்கைக்கும் ஒத்துப்போகும் வகையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் நிச்சயம் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் கலந்து கொள்வோம். எம்முடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும் அனைத்துக் கட்சிகளினதும் பிரத்தியேகமாக உள்ள அவர்களது கொள்கைகள் பாதுகாக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவினர் நேற்று வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து நான்கு மக்கள் சந்திப்புகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் பல விடயங்கள் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அரசியல் தேவைகளை விடுத்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எமது பிரதான இலக்காகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM