தமிழ் தேசத்தை அங்கீகரித்து அதற்கு தனியான இறைமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண் டும் என்பது உட்பட 13 அம்சக் கோரிக்கைகளை 5 தமிழ் கட்சிகள் ஒருமித்து நின்று முன் நிபந்தனைகளாக பிரதான வேட்பாளர்களின் முன்னிலைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளமையை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பெரிதும் வரவேற்று மனம் உவந்து பாராட்டுகின்றது.என்று இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
இது தொடர்பாக இவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் கட்சிகளின் ஒருமித்த இம்மகத்தான முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது எமது பெருவிருப்பமும், பிரார்த்தனையும் ஆகும். அதே நேரத்தில் தமிழ் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தியவர்களாக இவ்விடயத்தில் தமிழ் கட்சிகளை பொது இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி அடைந்துள்ள பல்கலைக்கழகங்களின் தமிழர் மாணவர் ஒன்றியங்களையும் நாம் வாழ்த்தி மகிழ்கின்றோம்.
மேலும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினராகிய நாம் எம்மை அழைத்து பேசிய தரப்பினருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்கு சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தியவர்களாக 13 அம்சக் கோரிக்கைகளை முன்நிபந்தனைகளாக முன் வைத்து அவர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தி, அவை தொடர்பாக அவர்களுடன் இரு சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி, இப்பொழுது நிறைவு பேச்சுவார்த்தைக்கு தயாரான தருணத்தில் வந்து நிற்கின்றோம் என்பதையும் இத்தருணத்தில் பொருத்தப்பாடு கருதி அறிய தருகின்றோம்.
எமது பெருந்தலைவர் அஷ்ரப் இந்நாட்டின் இறைமை உள்ள எல்லா இன மக்களும் அவரவர்களுக்கு உரிய தேசியம், தனித்துவம், சுய நிர்ணயம், உரிமை, சுதந்திரம், இருப்பு, பாதுகாப்பு ஆகியவற்றுடன் இந்நாட்டில் ஐக்கியம், சமாதானம், சகோதரத்துவம் கொண்டவர்களாக நிம்மதியாக, சுபிட்சமாக வாழ வேண்டும் என்று கனவு கண்டதன் அடிப்படையிலே அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கின்ற அரசியல் இயக்கத்தை உருவாக்கி, ஒன்றுபட்ட தேசத்தை கட்டி எழுப்புகின்ற பெருமுயற்சியில் ஈடுபட்டு அந்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணித்து கொண்டிருந்தபோதே உயிர் துறக்க நேர்ந்தார்.
ஆயினும் அவரின் மறைவுக்கு பின்னர் முஸ்லிம் தலைமைகள் திசை மாறிய பறவைகளாக மாறி பேரினவாதத்தின் அடிவருடிகளாக முகவர் பாத்திரங்களை ஏந்தி கொண்டு அழுக்குகளை ஆபரணங்கள் என்று நினைத்து உடல் முழுவதும் அணிந்து வைத்திருக்கின்றார்கள். அவை விலங்குகளாக மாறி அவர்களை பிணித்து வைத்திருக்கின்றன. இவ்விதமாக சீரழிந்து போய் கிடக்கின்ற முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தையும் ஒட்டுமொத்தமாக சீரழித்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களின் வாக்குகளை பண்டமாற்று பொருட்களாகவும், வியாபார பண்டங்களாகவும் மாற்றி இருப்பது மட்டும் அல்லாமல் பெருந்தேசிய கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்குவதில் வரலாற்று ஒற்றுமையை அடைந்து விட்டார்கள் என்பதாக மார்பு தட்டுகின்ற இவர்களின் ஈனச் செயல் எமக்கு ஆழ்ந்த கவலையை தந்திருக்கின்ற நிலையில் தமிழ் தலைமைகளின் முன்மாதிரி எமக்கு ஆறுதலை தருகின்றது.
இறைமை உள்ள எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் ஒற்றுமை இழந்து காணப்படுகின்றனர் என்பதும் யாவரும் அறிந்த உண்மையே. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகளை ஒன்றுபடுத்தி நேர்வழிக்கு கொண்டு வருவதற்கு கடந்த காலங்களில் நாம் எம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து இருக்கின்றோம். இப்பொழுதும் எம்மால் அவை போன்ற முன்னெடுப்புகளை நிச்சயம் மேற்கொள்ள முடியும். ஆயினும் அதற்கு அரசியல் சாயம் பூசி விடுவார்கள்.
எனவே அந்த பாரிய பொறுப்பை முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றையும் இணைத்து கொண்டு பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மாணவர் ஒன்றியங்கள் கைகளில் எடுத்தவர்களாக தமிழ் மாணவர் ஒன்றியங்களை முன்னுதாரணங்களாக கொண்டு முழுவீச்சுடன் அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இத்தருணத்தில் முன்வைக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM