(தி.சோபிதன்)
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நண்பகல் யாழ் நகரிலுள்ள ஜெட் வின் விருந்தினர் விடுதியில் பத்து நாடுகளின் தூதுவர்களுடன் முக்கிய சந்திப்புக்களையும் நடத்தவுள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு பொது மக்களுக்கான விமான சேவையை வழங்குவதற்காக இன்றைய தினம் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இந்த ஆரம்ப விழாவில் இந்தியாவின் சென்னையில் இருந்து அலைன்ஸ் எயார் நிறுவனத்தின் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
சென்னையில் இருந்து வாரத்தில் ஏழு விமானங்களை பலாலிக்கு இயங்க வைப்பதற்கு இந்திய அரசு இணங்கியுள்ளது. மேலும் வாரத்திற்கு 12 விமானங்களை இயக்கவைப்பதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதையடுத்து 15 குடி வரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மிகப் பிரமாண்டமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்நிகழ்விற்கு பிரதமர், அமைச்சர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் விமான சேவைகளை ஆரம்பித்து வைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன்பின்னர் மதியம் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் பத்துப்பேரை சந்தித்து பேசவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து வெளிநாட்டுத் தூதுவர்களை ரணில் விக்கிரமசிங்க சந்திப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM