வெல்லம்பிட்டி, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்கள் வழங்குவதற்கும் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணங்கள் மற்றும் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்வதற்கு
தேவையான வசதிகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் நேற்று வெல்லம்பிட்டி கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, றிஷாத் பதியுதீன், சுசில் பிரேமஜெயந்த, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், சுனில் ஹதுன்னெத்தி மாகாண சபை உறுப்பினரான பாயிஸ், முல்லேரியா கொடிகாவத்த பிரதேச சபை தலைவர் சோலங்காரச்சி மற்றும் பிரதேச செயலாளர்கள் பொலிஸ் அதிகாரிகாகள் மதகுருமார்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இது குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தொடர்ந்து கூறுகையில்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கு தேவையான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களில் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு செல்லமுடியாத நிலைமையில் இருப்பவர்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்களை தங்கவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் மீண்டும் வீடுகளுக்கு செல்வதற்கு முடியுமாக இருப்பவர்களின் வீடுகளை சுத்தப்படுத்தும் பொறுப்பை இராணுவத்தில் இருக்கும் தொண்டர் அமைப்புக்கு வழங்குவதென்றும். அதேபோன்று அந்த பகுதியில் பாரியளவில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸாரை ஈடுபடுத்துவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தொடர்ந்து சமைத்த உணவு வழங்குவதற்கும் உறவினர்களின் வீடுகளில் இருப்பவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் அச்சுப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரிப்பதற்கு மாகாண கல்வி அமைச்சு ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் கொடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM