உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியை சஜித்தினால் பகிரங்கப்படுத்த முடியுமா ? விமல்

Published By: Jayanthy

16 Oct, 2019 | 09:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலின் உண்மைகள் நாட்டு மக்களுக்கு இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதி சஹ்ரானின் பின்னணியின் இருந்த  அமைச்சர்கள் யார் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்களின் பின்புலங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவினால் பகிரங்கப்படுத்த முடியுமா? என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

  

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று  புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும்  அவர் கூறுகையில்

குண்டுத்தாக்குதல் இடம் பெற்று  ஐந்து மாதங்கள் கடந்தும் இன்னும்  தாக்குதலுக்கான காரணம்,   பயங்கரவாதி  சாஹ்ரானுக்கு  உதவி புரிந்த அமைச்சர்கள்,  அடிப்படைவாத அமைபபுக்களுக்கு  எங்கு இருந்து நிதி கிடைக்கப் பெற்றது என்ற உண்மைகள்  எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஆனால் உண்மைகள் அனைத்தும் அரசாங்கம் நன்கு அறியும்   நாட்டு மக்களிடம் வாக்குகளை கோரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளர் சஜித் பிரேமதாஸ போலியான   வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து குண்டுத்தாக்குதல் குறித்த  உண்மைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

அத்துடன் அரச நிறுவனங்கள் மற்றும்  திணைக்களங்களில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு   வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில்   தேசிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37