இந்திய மகளிர் அணியின் தலைவி மிதாலி ராஜிற்கு தமிழ் தெரியாது ஏனைய மொழிகள் மாத்திரம் தெரியும் என டுவிட்டரில் கேலி செய்தவர்களிற்கு அவர் தமிழில் பதில் அளித்துள்ளதுடன் தமிழ் என் தாய் மொழி என குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரை இந்திய மகளிர் அணியினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் மகளிர் கிரிக்கெட் உலகில் 20 வருடங்களை பூர்த்தி செய்த ஒரேயொரு வீராங்கனை என்ற சாதனையையும் மித்தாலி ராஜ் நிகழ்த்தியுள்ளார்.
மித்தாலி ராஜின் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கரின் இந்த டுவிட்டிற்கு பதிலளித்திருந்த மித்தாலி ராஜ் ஆங்கிலத்தில் நான் எனது வாழ்க்கை முழுவதும் உதாரணமாக கொண்ட நபர் ஒருவரால் பாரட்டுப்பெறுவது மிகவும் சிறப்பான விடயம் என தெரிவித்துள்ளார்.
மித்தாலி ராஜின் இந்த டுவிட்டிற்கு கருத்து தெரிவித்த பலர் அவரிற்கு தமிழ் தெரியாதா என கேள்வி எழுப்பினர்.
அவருக்கு தமிழ் தெரியாது,அவருக்கு ஆங்கிலம் தெரியாது,தெலுங்கு இந்தி தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மித்தாலி ராஜ் தமிழ் என் தாய்மொழி நான் நன்றாக தமிழ்பேசுவேன் தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்தியன் என்ற அடிப்படையில் நான் பெருமைப்படுகின்றேன் எனவும் மித்தலி ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM