யாழில் இடம்பெற்ற பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் பொலிசாரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைக்குண்டுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிசார் நீண்டகாலமாக தேடி வந்துள்ளனர்.
குறித்த நபர் இராசாவின் தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் மறைந்திருக்கின்றார் என யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபரை கைது செய்யும் போது அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றினையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிசார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM