மட்டக்குளி, கம்பஹா பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி காணப்படுவதாக தெரிவித்து வெடிகுண்டுப்புரளி பரவியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.
இந்நிலையில், இனந்தெரியாத சிலர் பரப்பிய வதந்தியே இந்த பதற்ற நிலைக்கு காரணமென தெரிவிக்கும் பொலிஸார், வதந்திகளை நம்பவேண்டாமென மக்களை கேட்டுள்ளனர்.
மட்டக்குளி, சென்றல் வீதியிலுள்ள பாடாலையொன்றுக்கு அருகிலும் மற்றும் கம்பஹா பகுதியிலும் வெடிகுண்டு புரளி ஒன்று பரவியதால் இன்று காலை குறித்த பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றுக்கு அருகில் காரொன்று நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பதற்றநிலையேற்பட்டிருந்தது.
இதேவேளை, மட்டக்குளி பகுதியில் அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த கார் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பாடசாலைகளின் மாணவர்களை பெற்றோர்கள் பாதுகாப்புக் கருதி அழைத்துச்சென்றுள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM