(எம்.எப்.எம்.பஸீர்)
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள நிதியில், சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 45.8 மில்லியன் ரூபா நிதியும் உள்ளடங்கியுள்ளது.
எவ்வாறாயினும் சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படும் நிதிக்கு மேலதிகமாக, தேர்தல்கள் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள், அவர்களது நலன்புரி நடவடிக்கைகள், வாகன வாடகை, எரிபொருள் உள்ளிட்ட பல செலவுகள் தொடர்பில் ஏனைய நிதி தமக்கு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM