தேர்தல் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மட்டும் 668.5 மில்லியன் ரூபா நிதி தேவை

Published By: Vishnu

15 Oct, 2019 | 06:20 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள நிதியில்,  சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 45.8 மில்லியன் ரூபா நிதியும் உள்ளடங்கியுள்ளது.

எவ்வாறாயினும் சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படும் நிதிக்கு மேலதிகமாக, தேர்தல்கள் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள், அவர்களது நலன்புரி நடவடிக்கைகள்,  வாகன வாடகை, எரிபொருள் உள்ளிட்ட பல செலவுகள் தொடர்பில் ஏனைய நிதி தமக்கு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41