நைஜீரியாவில் இஸ்லாமிய பாடசாலையொன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 67 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கடுனா மாநிலத்தில் கடந்த மாதம் இவ்வாறு மோசமானநிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 300ற்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே நைஜீரியாவின் வடபகுதியில் 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
7 முதல் 40 வயதுடையவர்களே மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர்களும் ஆண்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர் அவர்கள் மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இரு ஆசிரியர்களும் அதிபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த இஸ்லாமிய பாடசாலையில் காணப்பட்ட பலர் காவல்துறையினர் அங்கு செல்வதற்கு முதல் தப்பியோடிவிட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் தங்கள் கைவிலங்குகளுடன் தப்பிச்சென்றுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தாங்கள் உணவின்றி வாடுவதுடன் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சீற்றமடைந்தனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல தசாப்தங்களாக இயங்கிவந்த இந்த பாடசாலையில் குரான் கற்பிக்கப்பட்டதாகவும் நடத்தை பிரச்சினைகள் உள்ளவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM