”ராஜாவுக்கு செக்” என்ற திரைப்படத்தை இயக்குநர் சேரன் நடித்துள்ளார்.
வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் தங்களின் குடும்பத்துடன் படமாளிகைக்கு சென்று பார்க்க வேண்டிய படமாக “ராஜாவுக்கு செக்” அமைந்திருக்கிறது என்று இயக்குநரும், அப்பட நாயகனுமான சேரன் தெரிவித்திருக்கிறார்.
Pallatte kokkatt film house சார்பில் தயாரிப்பாளர் தோமஸ் கோக்காட்டி தயாரித்திருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘ராஜாவுக்கு செக்’. இப்படத்தில் சேரன், ஸ்ருஷ்டி டாங்கே, சாரா சுப்பையா, இர்ஃபான், நந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாய் ராஜ்குமார். அறிமுக இசையமைப்பாளர் வினோத் எஜமானியா இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர்கள் சரண், வசந்தபாலன், பத்மாமகன், தயாரிப்பாளர் காளியப்பன், படத்தின் நாயகனும் இயக்குநருமான சேரன், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, சாரா சுப்பையா, இர்ஃபான், தயாரிப்பாளர் தோமஸ் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். விழாவிற்கு வருகைத் தந்த அனைவரையும் தயாரிப்பாளர் தாமஸ் கோக்காட்டி வரவேற்றார்.
நாயகி ஸ்ருஷ்டிடாங்கே தெரிவிக்கையில்,“இப்படத்தின் ஹீரோ கதை தான். இந்தப்படத்தில் மிக முக்கியமான பாத்திரம் செய்திருக்கிறேன். நிச்சயமா இப்படத்திற்கு பிறகு நிறையபேர் என் கதைப் பற்றியும், படம் பற்றியும் பேசுவார்கள் என நம்புகிறேன். இந்த நல்ல படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தில் ஒரு மிக முக்கியமான சீன் பண்ணிருக்கேன். அப்படியொரு காட்சியில் வேறு எந்த நடிகையும் நடிக்கவில்லை. ஒரேயொரு நடிகை தான் நடித்துள்ளார். அதன்பின் நான் தான் நடித்துள்ளேன்" என்றார்.
இயக்குநர் வசந்த பாலன் தெரிவிக்கையில்,“ஒரு மனிதன் அப்பாவாகும் தருணம் மிக முக்கியமானது. எனக்கு பையன் பிறக்கும் போது கூட அப்பாவாக உணரவில்லை. என் மகனுக்கு 104 டிகிரி காய்ச்சல் வந்தபோது, மூன்று மணிநேரம் கைகளில் வைத்திருந்தேன் அப்போது தான் நான் அப்பாவாக உணர்ந்தேன். அதுபோல் சேரனை அப்பாவாக இப்படத்தில் பார்த்தது மிகவும் பொருத்தமாக இருந்தது" என்றார்.
இயக்குநர் சேரன் தெரிவிக்கையில்,“இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர மிக அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உட்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக்குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ் பிரபு கதைக்குள் அடங்குகிற கேமராமேன் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் அரவணைப்பு முக்கியம் என்பதை உணர்வீர்கள்" என்றார்.
இயக்குநர் சாய் ராஜ்குமார் தெரிவிக்கையில்,“என்னை அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொண்ட வசந்த் சாருக்கு முதல் நன்றி. அடுத்து சரண் சாரிடம் ஐந்து படங்கள் வேலை செய்தேன். எஸ்.பி பி சரண் தான் என்னை ‘மழை ’படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பத்மாமகன் தான் இந்தப்படத்தை வாங்கிக் கொடுத்தார்.
அவருக்கும் நன்றி. இப்படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக தயாரிப்பாளர்கள் செய்து கொடுத்தார்கள். சேரன் சாரிடம் இப்படத்திற்காக முதலில் பேசும்போது ஒத்துவரவில்லை. ஆனால் நான் அவரை விடவில்லை. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தை ரிபிளேஸ் பண்ணிட்டு இன்னொரு ஹீரோவை நினைத்தே பார்க்க முடியாது.
அதேபோல் இப்படத்தில் சேரனைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இர்பானை நெகட்டிவ் ரோல் பண்ணச்சொன்னேன்.அவர் யோசித்தார். ஆனால் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டிடாங்கே கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. இதுபோல் எல்லாக் கேரக்டர்களும் வித்தியாசமானதாக இருக்கும். ” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM