(நா.தனுஜா)
வேறொருவரால் அதிகாரம் செலுத்தப்படக்கூடிய, பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு செயற்படக்கூடிய கைப்பொம்மை ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் போது என்னைக் கட்டுப்படுத்தக்கூடிய, என்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை அன்றாடம் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்துகின்ற சாதாரண மக்களாகிய உங்களுக்கு மாத்திரமே இருக்கின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரணியகல மக்கள் முன்நிலையில் தெரிவித்தார்.
நாட்டை ஆட்சி செய்யும் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு வேறொரு சட்டமும் இருக்க முடியாது. அவ்வாறானதொரு யுகம் காணப்பட்டது. ஆனால் என்னை நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குகின்ற போது நாட்டின் ஆட்சியாளராவது நீங்களேயன்றி வேறெவரும் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டார்.
தெரணியகல நகரில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM