பெருந்தோட்ட மக்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்தவர் ரணசிங்க பிரேமதாஸ - வே. இராதாகிருஷ்ணன்

Published By: R. Kalaichelvan

15 Oct, 2019 | 01:07 PM
image

(நா.தனுஜா)

பெருந்தோட்ட மக்களை கள்ளத்தோணி, நாடற்றவன் என்று அழைத்த யுகத்தை மாற்றி, எமக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்து, இன்று நாமும் இந்த நாட்டின் பிரஜைகளே என்ற கௌரவத்தை ரணசிங்க பிரேமதாஸவே பெற்றுக்கொடுத்தார்.

இன்று நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் என்ற எவ்வித இன,மத பாகுபாடுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதற்காகவே அவருடைய மகனான சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்று விசேட பிரதேசங்கள் அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகளையும், மலையகம் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 அம்சக்கோரிக்கைகளையும் அவரிடம் எடுத்துரைத்திருக்கின்றோம்.

அதன்படி இதுகுறித்து ஒரு பிரத்யேக ஜனாதிபதி செயலணியை அமைத்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தீர்வளிப்பதாக அவர் உறுதியளித்திருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெரணியகல நகரில் இன்று இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் களமிறக்கினால், அவருக்கு வாக்களிப்போம் என்று கடந்த ஒருமாதகாலத்திற்கு முன்னர் அனைவரும் கேட்டுக்கொண்டனர். 

இப்போது அவரை வேட்பாளராகக் களமிறக்கிவிட்டோம். அவருக்கு வாக்களித்து இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவது மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் என்ற எவ்வித இன,மத பாகுபாடுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50