(நா.தனுஜா)
பழைய இறப்பர் செருப்பும், அரச அலுவலக பதிவாளர் போன்ற ஆடையும் அணிந்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று சிலர் பேஸ்புக்கில் விமர்சிக்கின்றார்கள். ஆனால் இவற்றிலிருந்தே சஜித் பிரேமதாச பொது மக்களின் சேவையாளன் என்பது தெளிவாகின்றது.
அத்தகைய ஒருவருக்கு இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கப் போகின்றீர்களா? அல்லது நாட்டின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் ராஜபக் ஷவே செயற்படும் வகையில் ஒரு குடும்பத்திடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா? என்று தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஹப்புத்தளை நகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இப்போது தான் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எமது மனங்களில் அரசியல் ரீதியில் ஒருவித தைரியம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் சுமார் 25 வருடங்களுக்கும் அதிக காலத்தின் பின் னர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்கான பயணத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின் றோம்.
நாம் முன்னின்று போராடி ஜனாதிபதியாக்கிய ஒருவர் வேறு ஒரு கட்சியுடன் இணைந்து செயற்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி கைவிடப்பட்டது. அத்தகையதொரு தருணத்தில் கடந்த காலத்தில் நாம் மிகவும் நேசித்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாகும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றார் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.
சிலர் பேஸ்புக் பக்கங்களில் சஜித் பிரேமதாசவை விமர்சிக்கின்றார்கள். பழைய இறப்பர் செருப்பும், அரச அலுவலக பதிவாளர் போன்ற ஆடையும் அணிந்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று அவர்கள் கேட்கின்றார்கள். ஆனால் இவற்றிலிருந்தே சஜித் பிரேமதாச பொதுமக்களின் சேவையாளன் என்பது தெளிவாகின்றது. அவருக்கு மாளிகை போன்ற இல்லங்களுக்கோ அல்லது வெளிநாட் டுக் கல்விக்கோ எவ்வித குறையும் இருக்கவில்லை. ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் சென்று சேவையாற்ற வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த் துக் களமிறங்கியிருக்கின்ற கோத்தபாய (அச்சம்) என்ற மனிதர் அரசியலில் பிரதேச சபைத் தேர்தலில் கூட களமிறங்கியதில்லை. குறைந்தபட்சம் பிரதேச சபை நிர்வாகம் தொடர்பில் கூட அறியாத நபரொருவரால் இந்த நாட்டைச் சீரமைக்க முடியும் என்று கருதுகின்றீர்களா? ஆனால் சஜித் பிரேமதாசவிற்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுதான்.
அவரைப் பொறுத்தவரை இன, மத வேறுபாடுகள் எவையும் ஒரு பொருட்டல்ல. சஜித் பிரேமதாச அவருடைய தந்தையாரின் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் பின்பற்றி, அதே பாதையில் பயணிக்கின்ற ஒருவராவார். எனவே தனி யொரு குடும்பத்திடம் நாட்டைக் கைய ளிக்கப் போகின்றீர்களா அல்லது மக்களு டன் நின்று சேவையாற்றும் சஜித்திடம் நாட்டின் பொறுப்பை வழங்கப்போகின்றீர்களா என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும். நாட்டின் பிரதமரும், ஜனாதி பதியும் ராஜபக் ஷவாகவே இருப்பதை விரும்புகின்றீர்களா?
அரசியலைப் பொறுத்தவரை நாடு குறித்த ஒரு தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும். இந்த நாட்டில் கல்வி கற்று, இங்கேயே வேலைவாய்ப்பைப் பெறக்
கூடியவாறாக இருக்க வேண்டும். அத்தகைய திட்டமிடல் அற்ற ஒருவரிடம் நாட்டைக் கையளித்தால் எதிர்வரும் 10 வருடங்களில் நாமும், எமது எதிர்கால சந்ததியும் பாதிக்கப்பட நேரும். கடந்த காலத்தில் எம்மிடம் குறைபாடுகள் இருந்திருப்பின் அதற்கான நடவடிக்கை களை நீங்கள் மேற்கொள்ளலாம். ஆனால் இன்னும் 35 நாட்களில் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பைக் கைவிட்டு விட வேண்டாம்.
அதே போன்று தற்போது பலரும் எல் பிட்டி தேர்தல் தொடர்பில் பேசி வரு கின்றார்கள். நாட்டை நிர்வகிக்கும் தீர் மானம் எல்பிட்டி தேர்தல் ஊடாக மேற் கொள்ளப்படுவதல்ல.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM