இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த சர்வதேச தரப்பினரும் தலையிட முயற்சிக்க மாட்டார்கள். நெறிமுறைப்படி அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ‘ தி ஹிந்து’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர்,
” 2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்தியா அல்லது வேறு எந்த நாடும் அவர்களை (எதிர்க்கட்சி கூட்டணியை) ஆதரித்தன என்பதற்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் என்ன தவறு நடந்தது என்பதை இப்போது நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம். முன்னதாக எங்கள் அரசாங்கத்தை மாற்ற யாரும் செயற்பட்டிருந்தால் நாங்கள் இப்போது நிலைமையை சரிசெய்துள்ளோம்.
இந்தியா எங்கள் முதலிட நண்பர் மற்றும் அண்டை நாடு. எனவே அரசியல் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் செல்ல வேண்டும், ஆனால் பொருளாதார மற்றும் பிற விஷயங்களில் நீங்கள் சீனாவை மறக்க முடியாது .
இலங்கையில் சுமார் 15.99 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 80% வாக்கெடுப்பு நடந்தால் சுமார் 12 மில்லியன் செல்லுபடியாகும் வாக்குகளாக கருதப்படும். எங்கள் இலக்கு 6.5 மில்லியன் வாக்குகள். வெற்றி பெற தேவையான 50 வீதத்தை கடந்தாலே போதும். ஒரு உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்புக்கு 40 வீத வாக்குகள் போதுமானதாக இருந்தது, ஆனால் ஒரு தேசிய தேர்தலுக்கு அது போதாது.
தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை . கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை தமிழர்களால் மறக்க முடியாது. ஆனால் இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். எமது கட்சி அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கு உறுதிபூண்டுள்ளது. எங்கள் வேட்பாளர் அல்லது ஜனாதிபதி யார் என்பது முக்கியமல்ல, எங்கள் தலைவர் [மஹிந்த ராஜபக்ஷ] அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் [பிரதமராக]. எனவே, இந்த ஏற்பாடு எங்களுக்கு நன்றாக பொருந்துகிறது. அவர் எங்கள் தலைவர், அவர் நம் நாட்டின் தலைவர் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM