(நா.தனுஜா)
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றளவில் பெற்றுவரும் மிகச்சொற்ப வருமானத்திற்குப் பதிலாக தமது குடும்பத்தை சிறப்பாகக் கொண்டு நடத்தக்கூடிய நியாயமான ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்திருக்கிறார்.
ஹப்புத்தளை நகரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட மக்களுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாட்டின் தலைவர் என்ற வகையில் என்னுடைய தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே பெரும் தலைமைத்துவத்தை வழங்கி அதனைப் பெற்றுக்கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
அதேபோன்று எமது நாட்டின் மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நான் ஜனாதிபதியாகத் தெரிவான மறுநாளிலிருந்து மிளகு மீள்ஏற்றுமதியை முழுமையாகத் தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM