ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகுமாறு சிவாஜிலிங்கத்தை கோருவதுடன், அமைப்பு விதிகளுக்கமைய ஏனைய நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ரெலோவின் தலைமை குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அது தொடர்பாக ஆராய்வதற்காக ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் நேற்று கூடியது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியினுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக கட்சியின் அனுமதியின்றி சுயேச்சை வேட்பாளராக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் தாக்கல் செய்து தேர்தல் களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்ற முடிவின் அடிப்படையில், கட்சியின் அமைப்பு விதிகளுக்கு அமைவாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஒன்று ஏன் எடுக்கப்படக் கூடாது என்ற காரணத்தை அவர் தெரிவிக்க விரும்பினால், அந்த காரணத்தை எழுத்து மூலமாக எதிர்வரும் சனிக்கிழமை மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு அவரை கோருவதென தலைமை குழு முடிவெடுத்திருக்கிறது.
அவர் விளக்கமளிக்க தவறினால், அல்லது அவர் அளிக்கும் விளக்கம் தலைமை குழுவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அவர் மீது ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும். அமைப்பு விதிகளுக்கமைவாக, தேவைப்படும் ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
அதே நேரத்தில் கட்சியில் நீண்ட காலம் செயற்பட்டு வரும் தீவிர உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தலைமை குழு தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் உடனடியாக தேர்தல் களத்திலிருந்து விலகுமாறு தலைமை குழு அவருக்கு வேண்டுகோள் விடுக்கின் றது. அந்த வேண்டுகோள் எழுத்து மூலமாக அவரிடம் கையளிக்கப்படும். இந்த முடிவுகள் நீண்டநேர கலந்துரையாடலுக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் விவாதங்களுக்கும் பிறகே ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது.
கட்சியின் யாழ்.கிளை நேற்றைய தினம் இந்த விடயம் தொடர்பாக கூடி கலந்துரையாடியிருந்தது. அந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட கட்சியின் மாவட்ட கிளைகளுக்கு உரிமையுண்டு. அந்த அடிப்படையில் நேற்று அங்கு ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் கருத்து பரிமாற்றங்களும் இடம்பெற்றன. ஆனால் தீர்மானம் எதுவும் எட்டப்பட்டிருக்கவில்லை. கட்சியின் தலைமை குழுவே இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப் பது என்று நாம் தீர்மானம் எடுக்கவில்லை. தற்போது ஆறு தமிழ்க் கட்சிகள் கருத்தொற்றுமை கண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கைகளை ஏற்றுகொள்வார்களா இல்லையா என்று ஆரூடம் எதுவும் கூற முடியாது. இந்த கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய கடமை, தேவை எமக்கு இருக்கிறது. ஏற்றுக்கொள்வார்களா என்பதை சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM