உதவிக்கரம் நீட்டுவதற்கு எவருமில்லையென கவலை கொள்ள வேண்டாம் - டக்ளஸ்

Published By: Digital Desk 4

14 Oct, 2019 | 10:31 AM
image

உங்­க­ளுக்கு உற­வுகள் இல்லை என்றோ உத­விக்­கரம் நீட்ட  யாரும் இல்லை என்று கவ­லை­கொள்ள வேண்டாம். உங்­க­ளுக்­காக  கரம் கொடுக்க நான் இருக்­கின்றேன். நம்­பிக்­கை­யுடன் வாழ்க்­கையை முன்­னெ­டுத்துச் செல்­லுங்கள் என ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா செஞ்­சோலை கிராம உற­வு­க­ளுக்கு நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

கிளி­நொச்சி மலை­யாள்­புரம் பகு­தியில் அமைந்­துள்ள செஞ்­சோலைக் கிராமத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட செய­லாளர் நாயகம் அங்கு வாழும் உற­வு­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்பில் நேரில் பார்­வை­யிட்டு ஆரய்ந்­த­றிந்­து கொண்டார்.

அதன்­ பின்னர் அக்­கி­ரா­மத்தில் நடை­பெற்ற செஞ்­சோ­லையின் வலிகள் இறு­வட்டு வெளி­யீட்டு நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு இறு­வட்டை வெளி­யிட்டு வைத்த பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

 இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், -

கடந்த கால யுத்­தத்தின் வலிகள் உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரதும் வாழ்க்­கையில் கண்­ணூ­டாக தெரி­கின்­றது. உங்­க­ளது வாழ்­கையில் என்றோ நிரந்­தர ஒளி­ம­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் நம்­பிய தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் அக்­கறை கொள்­ளவில்லை.அவர்கள் உங்­க­ளது அழு­கை­க­ளைத்தான் தமது சுய­நல அர­சி­ய­லுக்கு முத­லீ­டாக கொள்­கின்­றனர். இத­னால்தான் யுத்தம் முடிந்து இது­வரை காலத்­திலும் அவர்கள் உங்­களை கண்­டு­கொள்­ளா­தி­ருக்­கின்­றனர். 

ஆனால் இன்று நான் உங்­க­ளிடம் வந்­துள்ளேன். உங்கள் வலி­களை அறிந்­தவன் நான். உங்­க­ளது வாழ்க்­கையில் நிரந்­தர வசந்தம் வீச  நிச்­சயம் அனைத்து முயற்சி­க­ளையும் செய்வேன். நீங்கள் என்­மீது நம்­பிக்கை வையுங்கள். நான் நீங்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சினை­ க­ளான குடிநீர் பிரச்­சினை, மல­ச­ல­கூட பிரச்சினை போன்ற அத்­தி­யா­வ­சிய பிரச்­சி­னை­க­ளுக் கான தீர்­வு­களை விரைவில் நிறைவு­வு­செய்து தரு­கின்றேன். 

அது­போல உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரது வாழ்­விலும் நிரந்­த­ர­மான எதிர்­கா­லத்தை கட்­டி­யெ­ழுப்ப அனைத்­து­வி­தமான முயற்­சி­க­ளையும் நான் முன்­னெ­டுப்பேன். வர­வுள்ள ஆட்சி மாற்றத்தில் இவ்வாறாக எமது மக்கள் படும் துன்ப துயரங்களை துடைத்தெறிந்து அனைத்து தமிழ் மக்களையும் சிறப்பான ஒரு வாழ்வியல் சூழ்நிலைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59