(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுடன் முரண்படுவதனாலேயே பொதுஜன பெரமனுவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தேமே தவிர சுதந்திர கட்சியை ஆபத்துக்குள்ளாக்குவதற்கான எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருக்கிறார்.
சு.க கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தயாசிறி ஜயசேரவை விழித்து கடிதமொன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் தயாசிறி ஜயசேகர தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கடிதமொன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைப்பழு காரணமாக உங்களால் பதிவிடப்பட்டிருந்த கடிதத்திற்கு விரைவாக பதிலளிக்க முடியவில்லை. எனினும் நாம் எடுத்துள்ள இந்த தீர்மானம் சரியானது என்பதை புரிந்துகொள்ளுவீர்கள் என்று நம்புகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் இந்த முடிவையே எம்மால் எடுக்க முடிந்தது என்றும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM