(ஆர்.விதுஷா)
பத்தரமுல்லை - பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடையகமொன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில், குறித்த ஆடையகம் முற்றுமுழுதாக தீக்கிரையாகியதாக தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஆடையகத்தின் நான்காவது மாடியிலேயே இவ்வாறு தீ மூண்டுள்ளது. அதனை தொடர்ந்தும் ஏனைய மாடிகளிலும் தீ பரவியுள்ளதுடன் குறித்த ஆடையகம்முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த விபத்தில் உயிரிழப்புக்களும் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், அங்கு பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, கோட்டை தீயணைப்பு படையினருக்கு சொந்தமான 7 வாகனங்கள் கடமையில் ஈடுபடுபடுத்தப்பட்டுள்ளமையும்தெரியவந்துள்ளது.
அத்தோடு, தீயணைப்பு படையினர் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM