(எம்.மனோசித்ரா)
ஒக்டோபர் அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டின் ஜனாநாயக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சஜித்தை தெரிவு செய்தமை உள்ளிட்ட பல விடயங்களில் பிரதம் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த விடயங்கள் மகத்தானவை.
எனவே பிரதமரை இலங்கையின் ஜனநாயக தந்தை என்றே கூற வேண்டும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பு - காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஒக்டோபர் மாதம் என்பது ஒரு புரட்சிகரமான மாதமாகும். காரணம் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியின் போது இதே போன்றதொரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர்.
அதை தொடர்ந்து பாதுகாப்பதற்கு இன்றும் மக்கள் ஆதரவை வழங்கியிருக்கின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆதரவுடன் ஜனநாயகத்தை பாதுகாத்த தந்தை ஆவார். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்கும் விடயத்திலும் அவர் ஜனநாயக முறையில் செயற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் சஜித்தும் ரணிலும் மாத்திரம் முன்னோக்கிச் செல்வதல்ல. அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்வதே எமது இலக்காகும்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் எவ்வித பிரிவினைவாதமும் கிடையாது. அவரது சாதாரண உடை பாவனையை விமர்சிப்பவர்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன், சஜித் இலட்ச கணக்கு பெருமதியான பாதணிகளை வாங்கி அணிந்து கொள்ளத் தெரியாதவர் அல்ல. சாதாரணமாக இருப்பது அவரது இயல்பாகும்.
இந்த இடத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் சவால் ஒன்றை விடுக்கின்றேன். இலத்திரனியல் திரை இல்லாமல் சஜித் பிரேமதாச போன்று பேசிக் காட்டினால அப்போதாவது அவரை வேட்பாளராக ஏற்றுக் கொள்வது பற்றி மக்கள் சிந்திப்பார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ஸ்ரீலங்கா குடும்ப ஆட்சி கட்சியாகும். (ஸ்ரீலங்கா பவுல் பெரமுன ). எனவே வாக்களிக்க முன்னர் இது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM