(நா.தனுஜா)
எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டில் வாழும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளும், கஷ்டங்களும் தெரியுமா? இல்லை. ஆனால் சஜித் பிரேமதாஸ மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் பிரச்சினைகள் என்னவென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.
கடந்தகாலத்தில் ஜனநாயகத்தை முன்நிறுத்தி ரணசிங்க பிரேமதாஸ, காமினி திஸாநாயக்க போன்றோர் போராடினார்கள். இன்று அந்தப் போராட்டத்தை மக்களின் பங்களிப்போடு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. அக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நேற்று காலிமுகத்திடலுக்கு வருகை தந்திருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது சஜித் பிரேமதாஸவின் வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
நாங்கள் மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கின்றோம். எமக்கிடையில் எவ்வித பேதங்களோ அல்லது முரண்பாடுகளோ இல்லை. நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சஜித் பிரேமதாஸவை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காகக் கைகோர்த்திருக்கின்றோம்.
எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டில் வாழும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளும், கஷ்டங்களும் தெரியுமா? இல்லை. ஆனால் சஜித் பிரேமதாஸ மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் பிரச்சினைகள் என்னவென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.
எமக்கு திடீரென்று மேலே இருந்து குதிக்கின்ற ஒரு தலைமைத்துவம் தேவையில்லை. மாறாக மக்களுக்கான சிந்தித்து செயற்படக்கூடிய, ஜனநாயகத்தன்மை மிக்க, மனிதநேயமுள்ள சஜித் பிரேமதாஜவைப் போன்ற தலைவரே தேவை என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM