”டெக்னோ ஸ்ரீ லங்கா 2019“ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Published By: Daya

11 Oct, 2019 | 03:31 PM
image

“டெக்னோ ஸ்ரீ லங்கா 2019” தேசிய பொறியியல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இலங்கை பொறியியல் சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சியே இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு பாரிய பொறியியல் தொழிநுட்ப கண்காட்சியாகும். 

“புதிய பொறியியல் விஞ்ஞானத்தினூடாக பேண்தகு இலங்கையை நோக்கி” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வருட கண்காட்சி இன்று முதல் மூன்று தினங்கள் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் இடம்பெறும். 

கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன, இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.பல்லேவத்த, டெக்னோ ஸ்ரீ லங்கா 2019 கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபேகோன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46