வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் விழிப்புணர்வு நடை பவனி இடம் பெற்றது.மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.ஜெசிந்தன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வு நடை பவனி மன்னார் பஸார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த வீதி பாதுகாப்பு வாரத்தின் போது வடக்கு முழுவதும் பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் வீதி பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த நடைபவனி இடம்பெற்றது.மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட திணைக்கள பணியாளர்களும் குறித்த விழிப்புணர்வு நடை பவனியில் கலந்து கொண்டனர். நடை பவனியைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் வைத்து வீதிபாதுகாப்பு உறுதி மொழியையும் அதிகாரிகள் வழங்கினர்.கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடமாகாண வீதி பாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம் பெற்ற வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பவனி
Published By: Daya
11 Oct, 2019 | 11:04 AM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM