சுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரத்திற்கு வருகின்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (10) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றாடல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பில் அனைவர் மீதும் உள்ள பொறுப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காடுகளை பாதுகாத்தல், மரம் நடுதல் மற்றும் சுற்றாடல் மீது கரிசனை கொள்ளுதல், மரம், செடிகொடிகள், உயிரினங்கள் உட்பட பூமித் தாயை நேசிப்பது, அதனை வளப்படுத்துவது
மனிதர்கள் என்ற வகையில் எம்மீதுள்ள அடிப்படை பொறுப்பும் கடமையுமாகுமென்றும் தெரிவித்தார்.
அதேபோன்று தான் வாழும் சூழல், மரம், செடிகொடிகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பதற்கு பிள்ளைகளுக்கு சிறுபராயம் முதல் பயிற்றுவிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சுற்றாடலை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் சுற்றாடலை பாதுகாப்பதற்காக தான் கடந்த 05 வருட காலப்பகுதியில் முக்கியமான பல பணிகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக வரலாற்றில் முதன் முறையாக முப்படையினரையும் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.
இலங்கையின் எதிர்கால தலைமுறையினரை சூழல் நேயமிக்க பிரஜைகளாக சமூகமயப்படுத்தி தாய் நாட்டின் அழகிய சுற்றாடல் மரபுரிமையினை எதிர்கால தலைமுறைக்கு கையளிக்கும் முக்கிய நோக்குடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கல்வி அமைச்சின் முழுமையான அனுசரணையுடன் தேசிய சுற்றாடல் முன்னோடிகள் நிகழ்ச்சித்திட்டம் நாட்டின் பாடசாலை முறைமையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
40 சுற்றாடல் முன்னோடிகளுக்கு இதன்போது ஜனாதிபதியால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
“சுற்றாடலை பாதுகாப்பதில் சூழல் கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதியர் கல்விப் பிரிவின் பதிற் பீடாதிபதி பேராசிரியர் தேவக வீரகோனினால் விசேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது.
2019 சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் அணிவிப்பு நிகழ்வை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட நினைவு சஞ்சிகையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுற தேவப்பிரிய, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM