(செ.தேன்மொழி)
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வருகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் முடிவடைந்துள்ள 48 மணித்தியாலயத்தில் 156 தேர்தல் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்த முறைபாடுகள் தொடர்பில் அறிக்கை விடுத்துள்ள தேர்தல் ஆணையகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணியிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிவரையான 48 மணித்தியாலத்திற்குள் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 156 தேர்தல் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 4.30 மணி முதல் புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிவரையான 24 மணித்தியாலயத்தில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை பிற்பகல் வரையான 48 மணித்தியாலயத்தில் தேர்தல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் ,தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாக 153 முறைபாடுகளும் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
அதேவேளை மாவட்ட தேர்தல்கள் விசாரணை நிலையங்களுக்கு தேர்தல் சட்மீறல்கள் தொடர்பாக 58 முறைப்பாடுகளும் , வன்முறை தொடர்பாக முறைப்பாடொன்றும்மாக மொத்தம் 59 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதற்கமைய இதுவரை 156 தேர்தல் முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM