பிணை நிபந்தனையை மீறிய பாராளுமன்ற உறுப்பினருக்கு  விளக்கமறியல்

Published By: R. Kalaichelvan

10 Oct, 2019 | 05:17 PM
image

(செ.தேன்மொழி)

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபேசேகர சாந்த சிசிர குமார கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சிலாபம் நகரில் சட்டவிரோதமாக கூடி துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பாக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோரும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வாராந்தம் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, மாதாந்தத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் சந்தேக நபர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபர் இன்று சிலாபம் மேல் நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார். இதன்போது நீதவான் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58