தமிழகத்திற்கு வருகை தரும் சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி என இரண்டு தலைவர்களையும் பிரம்மாண்டமாக வரவேற்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“தமிழக கடற்கரையோர சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு வருகைதரும் சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு தலைவர்களுக்கும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 32 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படும்.
இதற்காக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரத்தையும், காணொளியையும் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM