தாய், மாமியார், சகோதரியுடன் சேர்ந்து பெற்ற சிசுவை கொன்று புதைத்த பெண் தப்பியோட்டம் ; மட்டுவில் பரபரப்பு

Published By: Digital Desk 4

10 Oct, 2019 | 04:02 PM
image

  மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் குடும்பபெண் ஒருவர் தகாத உறவின் மூலம் குழந்தையை பிரசவித்து வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழழை (09) இம்பெற்றுள்ளது.

அத்துடன்  இது தொடர்பாக குறித்த பெண்ணின் தாய். சகோதரி மற்றும் கணவனின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில்   சிசுவை பிரசவித்த தாய் தலைமறைவு ஆகியுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் 

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, 

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சந்திவெளி பத்தினி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 27 வயதான குறித்த பெண்ணின் கணவர் கடந்த மூன்றரை வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்துவருகின்றார். 

இந்த நிலையில் குறித்த பெண் தகாத முறையில் கர்ப்பமாகியுள்ளார் இதனையடுத்து கடந்த 18 நாட்களுக்கு முன் கணவர் வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்ததில் வயிற்றில் கட்டியிருப்பதாக பெண்ணின் கணவரின் தாயார் மற்றும் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று புதன்கிழமை (09)  குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்கு வெளியில் சென்றுள்ள நிலையில் மாலை குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து வீட்டில் கணவனின் தாயாரான மாமரியார் . பெண்ணின் தாயாரர் சகோதரி ஆகிய மூவரும் சேர்ந்து பிரசவத்தை பார்த்தனர் இதன்போது ஆண் சிசு ஒன்று பிரசுவிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் பிரசுவித்த சிசுவை துணி ஒன்றினால் சுற்றிக் கொண்டு கோவிலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் இன்று வியாழக்கிழமை (10) குறித்த பெண்ணின் சகோதரி, தாயார், மற்றும் கணவனின் தாயாரான ( மாமியார்) ஆகிய மூவரை கைது செய்துள்ளதுடன் குறித்த பெண் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாகவும். புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தின்  அனுமதி  கோருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44