(ரொபட் அன்டனி)
எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரிப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களினால் விசேட நிபுணத்துவம் வாய்ந்த குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ, தேசிய மக்கள் சக்தி அமைப்பின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரே இவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையிலும் இந்த மூவரின் தேர்தல் விஞ்ஞாபனங்களே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.
வேட்பு மனு தாக்கல்கள் நிறைவடைந்து இன்று முதல் தேர்தல் பிரசார கூட்டங்கள் ஆரம்பமாகின்றன. இந்நிலையில் இன்னும் சில தினங்கள் அல்லது ஓரிரு வாரங்களில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கைகள், திட்டங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு அனுகுமுறை, பொறுப்புக்கூறலுக்கான யோசனை, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், உள்ளிட்ட துறைகளிலான புதிய திட்டங்கள் என்பன தொடர்பில் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடவுள்ளனர்.
நாட்டின் துறைசார் அபிவிருத்திகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வெ ளிவிகார கொள்கை, அரசியல் கொள்கை, தேசிய ஒற்றுமை, புரிந்துணர்வு, நல்லிணக்க கொள்கைகள், இளைஞர் அபிவிருத்தி, வடக்கு–கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வளர்ச்சி, மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் என்பனவும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடங்கவுள்ளன.
மேலும் புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி பயணித்தல், புதிய அரசியலமைப்பு விடயம், தேர்தல் முறை மாற்றம், புதிய தொழில் முயற்சிகள், தொழில் வாய்ப்புக்கள், முதியோருக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறவுள்ளன. தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை மக்களிடம் முன்வைத்து மக்களின் ஆதரவை கோருவதற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM