(நா.தனுஜா)
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
இன்று காலை 8 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச, அங்கு இடம்பெற்ற பௌத்தமத அனுஷ்டானங்களில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாவிகாரைகளுக்குச் சென்று மல்வத்துபீட, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டார். அத்தோடு ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து சஜித் பிரேமதாச ஆசிபெற்றார்.
மேலும் மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாசலில் மதவழிபாட்டில் கலந்துகொண்ட அவர், கிறிஸ்தவ மதத்தலைவரான வியன் பர்னாந்துவை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டதுடன் கடுகலே ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM