கம்பஹா மாவட்டத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஆயுர்வேத மருந்தகம் என்ற போலிப் பெயரில் இயங்கி வந்த, சட்ட விரோத விடுதிகள் பலவற்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
சீதுவ, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பியகம போன்ற பிரதேசங்களில் இவ்வாறான போலி ஆயுர்வேத நிலையங்கள் மிக நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டான, களுத்துறை, சிலாபம், கேகாலை, உக்குவளை, கம்பளை, கொடகவெல, பொல்பித்திகம, ஹபரண, பிபில, ஹங்குரங்கெத்த, பல்லம, எல்லக்கல, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வயது 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட யுவதிகளும் பெண்களுமே இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் போலியாக நடத்தப்பட்டு வந்த இந்த விடுதிகளின் முகாமையாளர்களும் அடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM