கட்டானை பகுதியில் மோதல்: ஒருவர் பலி 

Published By: R. Kalaichelvan

08 Oct, 2019 | 02:44 PM
image

(செ.தேன்மொழி)

கட்டானை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ,பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸாகேவத்த பகுதியில் வீடொன்றின் முன்னால் நேற்று மாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திஸாகேவத்த - களுவாரிப்பு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது , 

உயிரிழந்த நபரும் காயமடைந்த பெண்ணும் கணவர் மனைவி ஆவர் . இவர்களிருவரின் மகனை குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் மோட்டார் சைக்கிளில் போகும் போது அச்சுறுத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த இளைஞன் இந்த விடயம் தொடர்பில் அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்து இளைஞனின் பெற்றோர்களான உயிரிழந்த நபரும் , காயமடைந்த பெண்ணும் சந்தேக நபர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது இடம்பெற்ற மோதலின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் நால்வரும் சேர்ந்து உயிரிழந்த நபரையும் அவரது மனைவியையும் பொல்லால் தாக்கியுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த  இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கணவர் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்னர். கட்டானை மற்றும் களுவாரிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 - 36 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11