மினுவாங்கொடை தொகுதிக்குட்பட்ட பல பிரதேசங்களில், டெங்குக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருவதாகத் தெரியவருகிறது.
நில்பனாகொடை, கோப்பிவத்தை, பொல்வத்தை, கல்லொழுவை போன்ற பகுதிகளில் இது வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா, நீர்கொழும்பு, ராகம வைத்தியசாலைகளில் தற்போது இட நெருக்கடிகளுக்கும் மேலால் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, டெங்குக் காய்ச்சல் நோய் பரவியுள்ள பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவுப் பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM