ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பின் இயக்குனர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவ்வமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே சுரங்கி ஆரியவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து இன்றுவரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த தினமான நேற்றைய தினம் 96 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. அதற்கு முன்னைய நாட்களில் 7 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் காணப்படுவதாகவும் குறிப்பாக பிரதான 3 வேட்பாளர்களின் சுவரொட்டடிகள் ஏராளமாக காணப்படுவதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பல பகுதிகளில் ஏராளமான பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வேட்பாளர்களை வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதை ஒன்றின் மீது எண்ணெய் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடுமுழுவதும் 7500 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக கபே அமைப்பின் இயக்குனர் சுரங்கி ஆரியவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM