(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ , குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திருந்த நிலையிலும் இன்று வேட்புமனு பத்திரங்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவில்லை.
இவ்விருவர் அடங்களாக 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரையில் இடம் பெற்றது.
41 கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர் ஆனால் 35 பேர் மாத்திரமே வழங்கப்பட்டிருந்த காலத்திற்குள் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அவரது சகோதகரர் முன்னாள் சபாநாயகர சமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டு கட்டுப்பணத்தை கடந்த வாரம் செலுத்தியிருந்தார்.
பொதுஜன பெரமுன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில் அவர் நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை யூகிக்க முடியாமல் கட்சியினை பாதுகாக்கும் நோக்கிலே சமல் ராஜபக்ஷ தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தினார் என்று கட்சி மட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் வேட்பாளராக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தார்.வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இறுதி தருணத்தில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவ்வமைப்பு விசேட ஊடக அறிக்கையினை வெளியிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM