தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும் ; மாவை 

Published By: Digital Desk 4

07 Oct, 2019 | 04:52 PM
image

நாங்கள் எங்கள் தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதுதான் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமையாகும் எனத் இலங்கைத் தழிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மாவை சேனாதிறாஜா தெரிவித்துள்ளார்,

 அத்தோடு விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் நாம் போதைக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவுள்ளோம் எனவும் தொரிவித்தார்

புத்தூர் ஆவரங்கால் உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தினர் நடத்திய சர்வதேச முதியோர் தின நிகழ்வு உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தின் தலைவர் தலையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாங்கள் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றோம் தொடர்ந்தும் போராடியவர்களாகவுள்ளோம் இத்தகைய சுழலில் எமது விடுதலைக்காக போராடும் போது அதனை குழம்பும் வகையில் பல்வோறு அடக்கு முறைகளும் பிரித்தாளும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது. இவற்றுக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். இதில் ஒன்றுதான் போதைவஸ்து இன்றைய சமுதாயத்தில் போதைவஸ்து பாவனை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. எமது இளம் சமுதாயத்தை சிதைக்கும் வகையிலே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது இதற்கு ஏதிராக போராட வேண்டியவர்களாகவுள்ளோம்

எத்தகைய போராட்டங்கள் என்றாலும் நாங்கள் அனைவரும் ஒருமித்து போராடவேண்டும் ஒரு மித்த முடிவுகள் எடுக்கும்போது அதனை அனைவரும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தும் போதுதான் அதன்பலன் எமது தேசத்தின் விடுதலைக்கு பலமாக இந்த ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும்.

முதியோர் தின நிகழ்வினை உதவும் கரங்கள் அமைப்பினர் முன்னின்று செய்கின்றார்கள் இத்தகைய இளைஞர்களைபோல் ஏனைய இளைஞர்களும் தமது கிராமத்தில் உள்ள முதியவர்களை கௌரவிக்கவேண்டும். முதியவர்கள் தான் இன்றைய வழிகாட்டிகள் அவர்களைப் பாதுகாக்கவேண்டும் தழிழர்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றாகும் அதேபோல் எமது பண்பாடுகளை பேணிபாதுகாப்பது எமது கடமையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10