(செ.தேன்மொழி)
சிலாபம்,சம்மாந்துறை,நொச்சியாகம ,தலங்கம , ஹபரண, புதுகுடியிருப்பு மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சிலாபம்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் புத்தளம் வீதியில் இருவர் பயணித்த சைக்கிள் ஒன்றுடன் லொறி மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த சைக்கிளில் சென்ற இருவரும் கீழே விழுந்துள்ளதுடன் பின்னர் அவர்களுள் ஒருவர் பின்னால் வந்த காருடனும் மோதுண்டுள்ளார். இதனை தொடர்ந்து காயமடைந்த இருவரும் கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று வீதியில் மோட்டார் சைக்கிளுடன் தனியார் பஸ் ஒன்று மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அலியார் காசிம் ரியால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நொச்சியாகம
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராபுரம் புத்தளம் வீதியில் யாத்திரைக்கு சென்று புத்தளம் நோக்கி சென்ற தனியார் பஸ்சின் மிதிபலகையிருந்து ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
லுனுவில பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்க வஜிர குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிபிட்டி பொரள்ளை வீதியில் முச்சக்கர வண்டியொன்று பாதசாரதி ஒருவர் மீது மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. அதன்போது படுகாயமடைந்த பாதசாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பன்னிபிட்டி பகுதியைச் சேரந்த 70 வயதுடைய ஹெட்டிகே தொன் பிரேமதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபரண
ஹபரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரண பொலன்னறுவை வீதியில் பாரவூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் பின்னால் சென்ற நபரும் ஹபரண வைத்தியசாலையிலிருந்து தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
அலவ்வ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய உதய குமார ரத்னாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுகுடியிருப்பு
புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நல்லதம்பி ராசகுமாரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை ஹட்டன் வீதியில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்றில் சாரதியின் கட்டுபாட்டை இழந்த இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதுண்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் பின்னால் சென்ற நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பின்னால் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நெதனல் பெட்ரிக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM